×

பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை: கள்ளக்காதலனுக்கு வலை

திருப்போரூர்: கேளம்பாக்கம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஷா இன் ஷா (26). நேற்று முன்தினம் மாலை ஷாஇன்ஷா, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். புகாரின்படி  கேளம்பாக்கம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஷாஇன்ஷா பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தில் டவலால் இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.மேலும் விசாரணையில், கண்ணகி நகரை சேர்ந்தவர் சரோஜா. பிரபல கஞ்சா வியாபாரி. இவரது ஆதரவில் வளர்ந்து வந்த ஷாஇன்ஷா முதலில் விஜயகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது இறப்புக்கு பின், வேறொருவரை திருமணம் செய்துகொண்டார். இவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரும் பிரிந்து சென்றார். ஷாஇன்ஷாவுக்கு, 2 கணவர்கள் மூலம் தலா ஒரு குழந்தை பிறந்தது. அவர், 2 குழந்தைகளுடன் கேளம்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்தார். அப்போது, அவருக்கு பாலவாக்கத்தை சேர்ந்த விஜய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய், செங்கல்பட்டு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு விஜய்யின் தம்பி கார்த்திக் (19), ஷா இன் ஷாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். அவருடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. அண்ணனின் சாவுக்கு பழிக்கு பழி வாங்க, ஷா இன்ஷாவை கார்த்திக் கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.இதைதொடர்ந்து, கார்த்திக் தந்தையிடம் நடத்திய விசாரணையில், அவர் 15 நாட்களாக வீட்டுக்கு வரவில்லை என தெரிந்தது. இதையடுத்து கார்த்திக்கின் நண்பர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையில், கொலை நடந்த 2ம் தேதி மாலை 6.30 மணிவரை கார்த்திக்கின் செல்போன் சிக்னல் கேளம்பாக்கம் பகுதியில் இருந்துள்ளது தெரிந்தது. இதையடுத்து போலீசார், கொலையாளியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்….

The post பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை: கள்ளக்காதலனுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Tiruppurur ,Shah In Shah ,Kamarajar Street, Kelambakkam ,Shahinsha ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நாடகம்